Thursday 26 July 2007

நினைத்தாலும் மறக்க முடியாதவை



நடந்து வந்த பாதையை
பெரும்பாலும் யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை
நடந்து கொண்டிருப்பவனுக்கு அது தேவையில்லை
ஆனால் நடக்க முடியாமல் போனாலோ
இல்லை திரும்பி வர நேர்ந்தாலோ மட்டுமே
அது குறித்து சிந்திக்கிறோம்

புதிய ஒருவரை சந்திக்கும் போது
அவருக்கு நம்மை அறிமுகம் செய்ய வேண்டி வருகிறது
இல்லை பழைய சினேகிதங்களை சந்திக்கும் போது
கடந்த காலத்தில் நடந்தவற்றை நினைத்து சிரிக்கவோ
அல்லது
அழவோ வேண்டிய நிலை ஏற்படுகிறது

நல்ல நிகழ்வுகள் என்பன
குறைவாகவே மனதில் பதிவாகிறது
தாக்கங்களும் வேதனைகளும் மட்டும்
மனித மனங்களின் போக்க முடியாத கறையாகி
அல்லது
வடுவாகி காயமாகி விடுகிறது

வயதாகும் போது
உடலிலும் உள்ளத்திலும் மாற்றம் தெரிகிறது
கண்களிலும் அடி மனதிலும்
தொடர்ந்தும் அதே குணாம்சம்
தொடர்கிறது.............

திரும்பிப் பார்க்க வைத்த
என் உறவுகளுக்கு என் முதற்கண் நன்றி!

என் மனதை திறப்பதாய்
என்னை சிலுவையில் அறைந்து கொள்ளப் போகிறேன்
அன்புடன்
உங்கள்
அஜீவன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home